கொண்டாட்டமும் கண்ணீரும்... கார் விபத்தில் உயிரிழந்த ஜோடாவிற்கு சாலா மரியாதை!
லிவர்பூல் வீரர் முகமது சாலா அழுதது குறித்து...
கார் விபத்தில் மறைந்த லிவர்பூல் வீரர் தியாகோ ஜோடாவுக்கு முகமது சாலா மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா (28), அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த பிரீமியர் லீக் போட்டிகள் இன்று (ஆக.16) அதிகாலை முதல் தொடங்கின.
Advertisement
Advertisement
இதில் முதல் போட்டியாக லிவர்பூல் அணியும் ஏஎஃப்சி போர்ன்மவுத் அணியும் அன்பீல்டு திடலில் மோதின.
இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 4-2 என வென்றது. இந்தப் போட்டியில் முகமது சாலா 90+4-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
கோல் அடித்தும் தியாகோ ஜோடா பாணியில் சாலா கொண்டாடினார்.
கடைசியில், ஜோடாவின் மறைவுக்கு பாடல் இசைக்கப்பட்டபோது சாலா மிகவும் உடைந்து அழத் தொடங்கினார்.
திடலில் கடைசி நபராக இருந்து அழுதுகொண்டே வெளியேறினார்.
இந்தக் காட்சிகள் லிவர்பூல் மட்டுமில்லாமல் இந்திய கால்பந்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
Mohamed Salah's tribute to Liverpool player Thiago Jota, who died in a car accident, has left everyone emotional.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.