FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமா் தங்கம் வென்றாா்.

Updated On : 25 ஆகஸ்ட் 2025, 2:26 am IST
ஐஸ்வரி பிரதாப் டோமா்
பகிர்:

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமா் தங்கம் வென்றாா்.

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவா் 50 மீ ரைஃபிள் பிரிவில் 462.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று ஐஸ்வரி பிரதாப் தங்கம் வென்றாா்.

சீனாவின் வென்யு ஸாவோ வெள்ளியும், ஜப்பானின் நவோயா ஓகடா வெண்கலமும் வென்றனா். இந்த பிரிவில் ஐஸ்வரி முழு ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றாா். ஏனைய இந்திய வீர்ரகள் செயின் சிங் நான்காம் இடமும், அகில் ஷெரான் ஐந்தாம் இடமும் பெற்றனா்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே 2023-இல் ஐஸ்வரி இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தாா். 2024-இல் ஷெரோனிடம் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments