இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வரவிருக்கும் ஆபத்து குறித்து...
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது.
இத்துடன் ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்ன பிரச்னை?
Advertisement
Advertisement
இந்திய கால்பந்து கூட்டமைப்பு புதிய விதிகளை அமல்படுத்த முடியாமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேசிய - சர்வதேச சட்ட முரண்பாடுகள், உள் பிரிவினை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இது குறித்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, ஃபிஃபா கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் இந்த பிரச்னைகளை தீர்க்காவிட்டால், இந்திய கால்பந்து உலகளாவிய தடையை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீரர்கள், கிளப் மற்றும் லீக் நிதி நிலைமை பாதிக்கப்படும். இது குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (ஆக.28) விசாரிக்கிறது.
கடந்த 2017 முதல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சோகத்தில் இந்திய கால்பந்து ரசிகர்கள்
கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசாங்கம் அதில் தலையிட நினைக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-இல் அகமதாபாதில் நடைபெற இருக்கும் நிலையில், ஃபிஃபாவினால் தடைசெய்யப்பட்டால் மோசமான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஏற்கெனவே, ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் ஒப்பந்தம் தொடர்பான பிரச்னைகளால் எஃப்எஸ்டிஎல் உடன் முரண்பட்டதால் அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் கிளப், தேசிய கால்பந்தின் வருங்காலம் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதால், இந்திய கால்பந்து ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
Indian football is staring at an international ban with world governing body FIFA and the Asian Football Confederation issuing a stern ultimatum to the embattled AIFF that it must adopt and ratify a new constitution by October 30 or risk suspension.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.