மதிப்புமிக்க வீரர் விருது: எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி புதிய சாதனை!
லியோனல் மெஸ்ஸியின் புதிய சாதனை குறித்து...
எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தத் தொடரில் முதல்முறையாக ஒரு வீரர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மதிப்புமிக்க வீரர் விருது வாங்கி சாதனை படைத்துள்ளார்.
எம்எல்எஸ் கோப்பையை இண்டர் மியாமி அணி முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது.
Advertisement
Advertisement
இந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி (38 வயது) 29 கோல்கள், 19 அசிஸ்ட்டுகளைச் செய்து தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருது வென்றார்.
இந்த சீசனில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுவென்ற மெஸ்ஸி, மதிப்புமிக்க வீரர் விருதையும் வென்றுள்ளார்.
கடந்த சீசனிலும் மெஸ்ஸி இந்த விருதை வென்றிருந்த நிலையில் இந்தாண்டும் வென்றது புதிய சாதனைக்கு வழிவகுத்துள்ளது.
முதல்முறையாக ஒரு வீரர் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். அதுவும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த முறை வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
Best player. Best team. Inter Miami's Lionel Messi is the unquestioned force in Major League Soccer right now, on a run like nobody else the league has ever seen.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.