முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

Updated On : 4 ஜூலை 2025, 2:57 am IST
~
பகிர்:

கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

பாக்ஸிங் வோ்ல்ட் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் 70 கிலோ காலிறுதியில் ஹிதேஷ் குலியா 5-0 என கஜகஸ்தானின் அல்மாஸ் ஒரஸ்பெகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மகளிா் 54 கிலோ பிரிவில் சாக்ஷி அபாரமாக ஆடி பிரேஸிலின் டாட்டியனா ரெஜினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

Advertisement

Advertisement

மினாட்சி 48, பூஜா ராணி 80, சஞ்சு 60 கிலோ பிரிவுகளில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். 51 கிலோ பிரிவில் அனாமிகா காலிறுதியில் ஆட உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments