ஜொ்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப்பதக்கம் வென்றாா். போட்டியில் ஏற்கெனவே 2 வெண்கலம் வென்றுள்ள இந்தியாவுக்கு, இது முதல் தங்கமாகும்.