கிறிஸ்டியானோ ரொனால்டோ.  படம்: ஏபி
செய்திகள்

ரொனால்டோவிற்கு 22 ஆண்டுகளில் முதல் ரெட் கார்டு... உலகக் கோப்பையில் சிக்கல்!

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்குத் தரப்பட்ட ரெட் கார்டு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 22 ஆண்டு தேசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ரெட் கார்டு வாங்கினார்.

இதன்மூலம், உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அயர்லாந்து உடனான ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி மோதியது.

இந்தப் போட்டியில் அயர்லாந்து 2-0 என வென்றது. இதில், 61-ஆவது நிமிஷத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.

அயர்லாந்து வீரரை தனது முட்டியினால் வேண்டுமென்றே இடித்ததால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கீழே விழுந்த நபரை அழ வேண்டாம் என ரொனால்டோ கிண்டல் செய்தார். ரெட் கார்டு கொடுத்ததும் ரொனால்டோவைப் பார்த்து அயர்லாந்து ரசிகர்கள் அழ வேண்டாமென சைகை செய்தனர்.

குரூப் எஃப் பிரிவில் போர்ச்சுகல் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகளுடன் ஹங்கேரி இரண்டாமிடமும் 7 புள்ளிகளுடன் அயர்லாந்து மூன்றாமிடமும் வகிக்கிறது.

ஹங்கேரியின் ஆட்டத்தை வைத்து நாளை போர்ச்சுகலின் உலகக் கோப்பை உறுதிசெய்யப்படும்.

அப்படி போர்ச்சுகல் தேர்வாகும்பட்சத்தில், உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரொனால்டோ விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் ரொனால்டோவின் சைகைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இரண்டு போட்டிகளில் தடை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Cristiano Ronaldo shown first red card for Portugal in 22 years; running risk of missing FIFA World Cup opener

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புது வெள்ளை மழை பொழிகின்றது... ரஜிஷா விஜயன்!

கடல் என் பார்வையில்... ரைசா வில்சன்!

மஹுவா தொகுதி: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தோல்வி

“திமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியுமா?” சேகர்பாபுவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

உக்ரைன் தலைநகரில் ரஷியா பயங்கர தாக்குதல்! 6 பேர் பலி; 35 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT