செய்திகள்

பிரணய், உன்னட்டி வெற்றி

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், உன்னட்டி ஹூடா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

தினமணி செய்திச் சேவை

லக்னெள: சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், உன்னட்டி ஹூடா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

முதல் சுற்றில், ஆடவர் ஒற்றையரில் போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் பிரணய் 21-15, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான சாஸ்வத் தலாலை வெளியேற்றினார். 4-ஆம் இடத்திலிருக்கும் கிரண் ஜார்ஜ் 21-17, 21-9 என்ற கேம்களில், இஸ்ரேலின் டேனியர் டுபோவென்கோவை வீழ்த்தினார்.

5-ஆம் இடத்திலிருக்கும் கே.ஸ்ரீகாந்த் 21-13, 21-10 என கவின் தங்கத்தை வென்றார். 6-ஆம் இடத்திலிருக்கும் தருண் மன்னெபள்ளி 21-7, 21-9 என சதீஷ்குமார் கருணாகரனை சாய்த்தார். மிதுன் மஞ்சுநாத் 21-18, 12-21, 21-10 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டிமிட்ரி பனரினை வெளியேற்றினார்.

மகளிர் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உன்னட்டி ஹூடா 21-13, 21-18 என்ற கணக்கில், சக இந்தியரான ஆகர்ஷி காஷ்யப்பை தோற்கடித்தார். 7-ஆம் இடத்திலிருக்கும் ரக்ஷிதா ஸ்ரீ 21-12, 21-14 என்ற வகையில், ஷ்ரேயா லிலியை வீழ்த்தினார்.

8-ஆம் இடத்திலிருக்கும் அனுபமா உபாத்யாய 21-9, 21-9 என உகாண்டாவின் ஃபடிலா ஷமிகாவை வென்றார். இஷாராணி பருவா 14-21, 21-17, 21-16 என்ற கேம்களில், சீன தைபேவின் சியு டோங் டுங்கை சாய்த்தார்.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-5, 21-7 என்ற கணக்கில் சுஜித் சுப்ரமணியன்/திவ்யா சுப்ரமணியன் கூட்டணியை வெளியேற்றியது. 5-ஆம் இடத்திலிருக்கும் சதீஷ்குமார் கருணாகரன்/ஆத்யா வரியத் இணை 21-16, 21-5 என்ற கேம்களில், சக இந்தியர்களான ஆயுஷ் தாஷ்/பிரத்யாஷா பாண்டாவை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

SCROLL FOR NEXT