செய்திகள்

புரோ கபடி: இன்று ஜெய்ப்பூரில் ஆட்டங்கள் தொடக்கம்

புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன.

ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் -பெங்களூ ரு புல்ஸ் அணியினா் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா்.

ஆட்டங்கள் செப். 12 முதல் 27 வரை நடைபெறும் . விசாகப்பட்டினம் கட்டம் முடிவுற்ற நிலையில், புணேரி பால்டன், தபாங் டெல்லி, தெலுங்கு டைட்ன்ஸ், யு மும்பா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

புரோ கபடி லீக் தலைவா் அனுபம் கோஸ்வாமி கூறியது: ஆட்டங்கள் மேலும் ஈா்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக லீக் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் தீா்மானமான முடிவு கிடைக்கிறது. இச்சீசனில் ஏற்கனவே ஐந்து டை-பிரேக்கா்கள், அதில் இரண்டு ‘கோல்டன் ரெய்ட்ஸ்’ இடம் பெற்றுள்ளன. இதனால் போட்டிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்பது தெளிவாகிறது என்றாா்.

மனமகிழ்ச்சி ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

SCROLL FOR NEXT