முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பைக்குத் தேர்வாகாததன் எதிரொலி: தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம்!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமைப் பயிற்சியாளர்கள் குறித்து...

Updated On : 12 செப்டம்பர் 2025, 6:11 pm IST
வெனிசுலா, பெரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள். - படங்கள்: எக்ஸ் / படிஸ்டா, ஏபி.
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத வெனிசுலா, பெரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த முடிவு மிகவும் கடுமையானதாக இருப்பதாக அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்

தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து பத்து அணிகளில் டாப் 6 அணிகள் நேரடியாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகின. அடுத்து 7-ஆவதாக இருக்கும் அணி பிளே-ஆஃப் சுற்றில் மோத வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

வெனிசுலா இதுவரை உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத ஒரே தென் அமெரிக்க அணியாக இருக்கிறது.

தனது கடைசி போட்டியில் வென்றிருந்தால் 7-ஆவது இடம் கிடைக்க வாய்ப்பிருந்தபோது 3-6 எனத் தோற்றது. பொலிவியா பிரேசிலை 1-0 என வென்று அந்த இடத்தைப் பிடித்தது.

இந்தக் காரணத்தினால், 20 மாதங்கள் அணியில் இருந்தும் சாதிக்காத, 55 வயதான தலைமைப் பயிற்சியாளர் படிஸ்டா நீக்கப்பட்டுள்ளார்.

பெரு அணி 10 அணிகள் கொண்ட தென் அமெரிக்க அணிகளில் 9-ஆவது இடம் பிடித்தது. சிலி மிகவும் மோசமாக விளையாடி 10-ஆவது இடத்தைப் பிடித்தது.

பெரு அணிக்கு 6 போட்டிகள் மட்டுமே தலைமப் பயிற்சியளாராக இருந்த 58 வயதான ஆஸ்கர் இபனேஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரு அணி கடைசியாக 2018 உலகக் கோப்பையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டீனா, பிரேசில், ஈக்குவாடர், உருகுவே, கொலம்பியா, பராகுவே நேரடியாகத் தேர்வாகி அசத்தின.

summary

Venezuela has fired coach Fernando Batista after the men's national team failed again to qualify for the World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments