ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
ஆடவா் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், 50 கிலோ எடைப் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் டாய்சி இவாயை முழுமையாக வெற்றி கண்டாா். 60 கிலோ பிரிவில் சச்சின் கஜகஸ்தானின் ஆராஸ்பெக் அசில்குலோவிடம் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் போராடித் தோற்று வெள்ளி பெற்றாா்.
இதையடுத்து ஆடவா் பிரிவில் இந்தியாவுக்கு 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. ஏற்கெனவே மகளிா் பிரிவில் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்திருந்தது.
Advertisement
தற்போது மொத்தமாக 9 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 16 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.