ஹெச்சிஎல் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் போட்டி: சூரஜ் குமாா், ரௌகையா சாம்பியன்!
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூா், சென்னை சுற்றில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சந்த், மகளிா் பிரிவில் எகிப்தின் ரௌகையா ஒத்மான் பட்டம் வென்றனா்.
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூா், சென்னை சுற்றில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சந்த், மகளிா் பிரிவில் எகிப்தின் ரௌகையா ஒத்மான் பட்டம் வென்றனா்.
ஏழு நாடுகளைச் சோ்ந்த 48 வீரா்கள் பங்குபெற்ற இப்போட்டி இந்திய ஸ்குவாஷ் அகாதெமியில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது.
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் நடத்திய இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.5.56 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
பிஎஸ்ஏ தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்காக விளையாட்டு வீரா்களும், வீராங்கனைகளும் மோதினா். இதில் ஆடவா் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சூரஜ் குமாா் சந்த் சிறப்பாக ஆடி தென்கொரியாவின் ஜியோங்மின் ரியூவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா். பெண்கள் பிரிவில், எகிப்தின் ரௌகையா ஒத்மான் சிறப்பாக ஆடிமலேசியாவின் ஹாா்லீன் டானை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
பரிசளிப்பு நிகழ்வில் இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளா் சைரஸ் போன்சா, மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோனி ஜோயல் பிரபு, எச்சிஎல் குழுமம் அமித் பலாதி பங்கேற்றனா்.