ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!
சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணியின் தோல்வி குறித்து...
சாம்பியன்ஸ் லீக்கில் 15 முறை கோப்பை வென்ற ஆண்ட பரம்பரையாக இருக்கும் ரியல் மாட்ரிட் அணி 2-4 என்ற கோல் கணக்கில் பென்ஃபிகாவிடம் தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இந்தத் தோல்வியின் மூலமாக ரியல் மாட்ரிட் அணி டாப் 8-ல் இடம்பிடிக்காமல், கடைசி 16 பட்டியலில் இடம் பிடித்தது.
பென்ஃபிகா அணி தனது சொந்த திடலான லிஸ்பனில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாபே 30 ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பென்ஃபிகா 36-அவது நிமிஷத்தில் சமன் செய்தது.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பெனால்டியில் கோல் அடித்து பென்ஃபிகா 2-1 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் 54-ஆவது நிமிஷத்தில் பென்ஃபிகா மீண்டும் கோல் அடித்து 3-1 முன்னிலையை நீட்டித்தது. எம்பாபே மீண்டும் கோல் அடித்து 2-3 என மாற்றினார்.
இந்தப் போட்டியில் 2-3 என ரியல் மாட்ரிட் தோல்வியுற்றாலும் டாப் 8-ல் இடம் பிடித்திருக்கும். ஆனால், ஸ்டாப்பேஜ் நேரத்தில் (காயம், விஏஆர், கொண்டாட்டத்தினால் ஏற்படும் இடைவெளியை சரிசெய்யும் கூடுதல் நேரம்) கோல் கீப்பர் தனது தலையால் கோல் அடித்து 2-4 என ரியல் மாட்ரிட் தோல்வியுற்றது.
இந்தத் தோல்வியினால் ரியல் மாட்ரிட் அணி 9-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. பென்ஃபிகா அணி டாப் 24 அணியில் இடம்பிடித்து, பிளே-ஆஃப் குவாலிஃபயர் சுற்றுக்குத் தேர்வானது.
கோல் அடித்த பென்ஃபிகா கோல் கீப்பர் அனடோலி ட்ரூபின், “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பைத்தியக்காரத்தனமான தருணம் இது.
எனக்கு 24 வயதாகிறது. இதுவரை நான் கோல் அடித்ததில்லை. இதுதான் எனது முதல் கோல். நம்பவே முடியவில்லை” எனக் கூறினார்.
When Benfica was awarded a foul near the area deep into stoppage time, coach Jose Mourinho looked at goalkeeper Anatoliy Trubin and told him to go into the penalty box for the set piece.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.