சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் இனவெறிக்கு உள்ளாகியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பென்ஃபிகா உடனான பிளே ஆப்ஸ் ஆட்டத்தில் வினிசியஸ் ஜூனியருக்கு நிகழ்ந்த இந்தக் கொடூரமான செயலுக்கு கால்பந்து உலகில் சர்ச்சை வெடித்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கில் பென்ஃபிகாவும் ரியல் மாட்ரிட் அணியும் முதல் கட்ட பிளே ஆப்ஸில் மோதின. இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றது.
இந்தப் போட்டியில் பென்ஃபிகா அணியின் வீரர் ஜியான்லுகா பிரெஸ்டியானி ரியல் மாட்ரிட் அணியின் வீரர் வினிசியஸ் ஜூனியரை குரங்கு எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகாரினால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பென்ஃபிகா வீரர் தான் அப்படி எதுவும் கூறவில்லை எனக் கூறினார். அந்த அணியும் எக்ஸில் விடியோ வெளியிட்டு, “இவ்வளவு தூரத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு என்ன கேட்டது?” எனப் பதிவிட்டுள்ளது.
இதே போட்டியில் ஆர்ஜென்டீன வீரர் ஓடமென்டி தன்னிடம் உலகக் கோப்பை இருப்பதாகவும் வினிசியஸிடம் என்ன இருக்கிறதெனவும் கூறியது வைரலானது.
இந்தப் போட்டியில் வினிசியஸ் 50ஆவது நிமிஷத்தில் சிறப்பான ஒரு கோல் அடித்ததும் அவரது ஆபாசமான கொண்டாட்டத்துக்கு மஞ்சள் கார்டு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் காரணத்தினால் பெஃபிகா அணியினர் அவர் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்தனர்.
முந்தைய 2024 பேலந்தோர் விருதிலும் தன்னை இன ரீதியாகப் பாகுபாடு காட்டியதாலே விருது மறுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி பேலந்தோர் விருது நிகழ்வைப் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் சுமாராக விளையாடிய வினிசியஸ் இந்த சீசனில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.