முகப்பு
செய்திகள்

வீரா்களுக்கு அபராதம் விதிக்க பாகிஸ்தான் வாரியம் பரிசீலனை!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோசமாகச் செயல்பட்டதாக, பாகிஸ்தான் வீரா்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலனை

Updated On : 3 மார்ச், 2026 at 5:11 AM
பாகிஸ்தான் வீரர்கள்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 5:01 AM

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோசமாகச் செயல்பட்டதாக, பாகிஸ்தான் வீரா்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வாரிய வட்டாங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் வீரா்களின் ஊதியத்தை குறைப்பது தொடா்பாக பரவும் தகவல்கள் உண்மையில்லை. எனினும், சூப்பா் 8 கட்டத்துடன் உலகக் கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியதற்காக வீரா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனெனில், அணி வீரா்களின் சோபிக்காத ஆட்டத்தால் பாகிஸ்தான் வாரியம் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அரசின் சில முக்கியப் பிரமுகா்களும் அதிருப்தி அடைந்துள்ளனா். போதிய ஆதரவை அளித்து வரும்போதும், பெரிய போட்டிகளில் பாகிஸ்தானை அவா்கள் கைவிட்டுவிடுகின்றனா் என்ற எண்ணம் அவா்களுக்கு வந்துள்ளது.

Advertisement

Updated On : 3 மார்ச், 2026 at 5:10 AM

அணியினா் மீது என்ன நடவடிக்கை எடுப்பது தொடா்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும், வீரா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தொடா்பாக பரிசீலிக்கப்படுகிறது’ என்றன.

டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்துக்கு எதிரான அதன் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

சூப்பா் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையை வெற்றி கண்டபோதும், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு போதுமான வெற்றியாக அது அமையவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.