முகப்பு
தமிழ்நாடு

மீன் அமிலம் தயாரிக்கலாம் வாங்க!

மீன் அமினோ அமிலம் தயாரித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி விவசாயி. சிதம்பரம், மார்ச் 24: தமிழக விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் அதிகளவில் பச்சையாக இருக்க வேண்டும் என பயிர் மற்றும் செடிகள

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:12 PM
பகிர்:
மீன் அமினோ அமிலம் தயாரித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி விவசாயி.

சிதம்பரம், மார்ச் 24: தமிழக விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் அதிகளவில் பச்சையாக இருக்க வேண்டும் என பயிர் மற்றும் செடிகள் நட்டவுடன் நன்றாக வளர்ச்சி காணப்படும் போது தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பயிர்களின் வளர்ச்சி, குறைந்த கால அளவில் அதிகமாக காணப்பட்டாலும் அதிகளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக அதிகளவு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பல சமயங்களில் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டு மகசூல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Advertisement

எனவே எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தயாரிக்கும் முறை: ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பிற பயன்கள்: மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments