முகப்பு
தமிழ்நாடு

மந்தகதியில் சாலைகள் சீரமைக்கும் பணி

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய சாலைகளான கொளத்தூர், மேட்டுக்கொளத்தூர் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:22 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய சாலைகளான கொளத்தூர், மேட்டுக்கொளத்தூர் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ÷

 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.35.7 லட்சத்தில் கொளத்தூர் மேட்டுக்கொளத்தூர் வரை மூன்று கிலோமீட்டர் சாலையும், அதே திட்டத்தில் எச்சூர் மேட்டுப்பாளையம் சாலையை ரூ.37 லட்சத்தில் சீரமைக்கவும், நபார்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் எறையூர் சாலையை சீரமைக்கவும், கடுவஞ்சேரி ஒட்டங்கரனை சாலையை ரூ.16.16 லட்சத்தில் சீரமைக்கவும், கப்பாங்கோட்டூர் எலிமையான்கோட்டூர் சாலையை ரூ.24.48 லட்சத்தில் சீரமைக்கவும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் மூலமாக ஒப்பந்தம் விடப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.

 ÷சாலையைச் சீரமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நான்கு மாதங்களாகியும்

 இன்று வரை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

 ÷இதனால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

 எனவே இந்த சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 ÷இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களிடம் கேட்டதற்கு, சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் எடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அரசியல்வாதிகள் என்பதால் அவர்களிடம் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே முதற்கட்ட பணிகள் கூட நிறைவேறாத நிலையிலும் 50 சதவிகிதம் வரை நிதி ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →