தமிழ்நாடு

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு அக்டோபர் 9-இல் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகள்

தினமணி

கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு அக்டோபர் 9-ஆம் தேதி செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோருக்கு குறள் பீட விருது வழங்கப்பட உள்ளது.

இதே போன்று 10 பேருக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT