இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இண்டமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி(28) என்பவருக்கும்
தருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இண்டமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி(28) என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள 1077 என்ற எண்ணுக்கு புகார் வந்தது.
இதன் பேரில், பாலக்கோடு வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயசெல்வம் ஆகியோர் இண்டமங்கலம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், 17 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நடத்து ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள், இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தனர்.அதேபோல, பெரியாம்பட்டி காமராஜ்நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்கு இருந்து இளம் வயது திருமணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.