முகப்பு
தமிழ்நாடு

சம்ஸ்கிருத வாரம் கொண்டாட்ட ஆணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சம்ஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையைக் கண்டித்து சிபிஎஸ்இ எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

சம்ஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையைக் கண்டித்து சிபிஎஸ்இ எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தி அரசு அலுவலகங்கள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் சம்ஸ்கிருத வாரத்தைக் கொண்டாட வேண்டும் என அண்மையில் மத்திய அரசு ஆணையிட்டது.

இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து புதுவை யூனியன் பிரதேசத்திலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ போராட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குழு அமைப்பாளர் சு.பாவாணன் தலைமை தாங்கினார். தோழமை அமைப்பு நிர்வாகிகள் இரா.அழகிரி, மங்கையர்செல்வம், ரா.ராசகேரன், முகமது ரபீக், சிவ.இளங்கோ, சக்திவேல், சாமிநாதன், கோ.அழகிரி, முருகானந்தம், அஷ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.