திருமணம் முடிந்த தினத்தன்றே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் புகார்
திருமணம் நடந்த தினத்தன்றே வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாக இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் கணவரை போலீஸார் திங்கள்கிழமை
திருமணம் நடந்த தினத்தன்றே வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாக இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கரூர் ஆதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபரி(21). இவர் கரூரில் உள்ள தனியால் மொபைல்போன் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலைப்பார்த்த கரூர் மொச்சக்கொட்டாம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்(27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை சபரி வீட்டில் வைத்து சபரியை ராஜேஷ் திருமணம் செய்தாராம். அப்போது தனக்கு வரதட்சனையாக ரூ.50 ஆயிரம் மற்றும் 10 பவுன் நகை ஆகியன தரவேண்டும் என்றாராம். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த சபரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தன்னிடம் வரதட்சனை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.
Advertisement