தமிழ்நாடு

விதவையர், ஊனமுற்ற படைவீரர்களுக்கு பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம்

போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு MEG(மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்) யூனிட் கோட்டா மூலம் நடத்தப்படும் பல்வேறு

எஸ். பாண்டியன்

போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு MEG(மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்) யூனிட் கோட்டா மூலம் நடத்தப்படும் பல்வேறு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சோல்ஜர் பொதுப்பணி, சோல்ஜர் டெக்னீசியன், சோல்ஜர் டிரேட்ஸ்மென், கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிக்கான ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு பெங்களூரு MEG சென்டர் சார்பில் கே.வி.ஸ்டேடியத்தில் 9-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து வருகிற 26-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த MEG பிரிவில் பணியாற்றிய படைவீரர்களின் போர் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களைச் சேர்ந்த குடும்பத்தினர் அதிக அளவில் பங்கேற்று பயனடையலாம்.மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையும்மாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT