FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காரைக்காலில் ரூ.83 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  போடப்பட்ட சாலை மேம்படுத்தும் பணி, சாலவம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

Updated On : 10 ஆகஸ்ட் 2015, 3:27 pm IST
பகிர்:

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  போடப்பட்ட சாலை மேம்படுத்தும் பணி, சாலவம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட வேட்டைக்காரன் தெரு, பிரதான பாரதியார் சாலையில் தொடங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுடையது. இச்சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  போடப்பட்டதாக கூறப்படுகிறது. முற்றிலும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது போக்குவரத்துக்கு தகுதியற்றதாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துவந்தனர்.

புதுச்சேரி கிராம மற்றும் நகரமைப்புத் துறை மூலம் ரூ.83 லட்சம், வேட்டைக்காரன் தெரு சாலை, சாலவம் அமைக்க புதுச்சேரி முதல்வர் அனுமதி வழங்கினார். காரைக்கால் நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். அவர் கூறும்போது, நீண்ட காலமாக சாலை புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துக்கூறியதன்பேரில், ரூ.83 லட்சம் ஒதுக்கீடு செய்ய உத்தரவு வழங்கினார். இப்பணியை நகராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. 700 மீட்டர் நீளத்தில் சாலையும், இருபுறமும் சாலவமும் கட்டப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் அனைத்துக்கட்சியினருக்கும் மகிழ்ச்சியான தருணம் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் காந்திராஜன், இளநிலைப் பொறியாளர் முத்துக்குமரபதி உள்ளிட்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments