தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்துப் பேசினார். இதில் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ், கட்சியின் குழித்துறை நகர செயலர் பொன். ஆசைத்தம்பி, மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், முன்சிறை ஒன்றிய செயலர் பொன். ஜீவராஜ், கட்சி நிர்வாகிகள் எஸ்.ஆர். சினி, மனோன்மணி, அப்துல் ரகுமான், குழித்துறை நகர்மன்ற கவுன்சிலர் ஷெர்லி நெல்சன் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சசிபெருமாள் மரணத்தை கொச்சைப்படுத்தி பேசிவரும் அமைச்சர் பதவி விலக வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.