சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
நாட்டின் 69-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
நாட்டின் 69-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 69 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் சனிக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர். பின்னர் மேளதாளத்துடன் பொதுதீட்சிதர்கள் தேசியக்கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தில் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.