கெடிலம் நதியில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கெடிலம் நதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த மாதம் 8, 9 தேதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கெடிலம் நதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த மாதம் 8, 9 தேதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு 25 நாட்களாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது. திங்கள் கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போலீசார் பழைய பாலம் அருகே சேதமடைந்த பகுதிகளைக் கண்காணித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கெடிலம் சுற்றியுள்ள ஊர் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் கெடிலம் நதி மற்றும் தென்பெண்னை ஆறுகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழிப்போடு இருக்குமாறு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.