கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் பலத்த மழை பெய்தது. பின்னர் ஒரு வாரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு...
கடலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் பலத்த மழை பெய்தது. பின்னர் ஒரு வாரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் சேதடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கணக்கெடுக்கச் செல்லும் இடத்தில் பொதுமக்களும், அதிகாரிகளும் தரக்குறைவாக பேசுகின்றனராம். இதனைக் கண்டிக்கும் வகையில் பண்ருட்டி குறிஞ்சிபாடி வட்டத்தில் உள்ள சுமார் 100-க்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பெடுத்து கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் மாலை அந்தந்த வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாகக் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் பண்ருட்டி வட்டச் செயலர் சிவலிங்கம் தெரிவித்தார்.