சிதம்பரத்தில் வெள்ள பாதிப்புகள்: அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் ஆய்வு
சிதம்பரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் உடன் சென்றார்.
சிதம்பரம் நகரில் கடந்த நவ.9-ம் தேதி பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கெடுத்து பெருத்த சேதம் ஏற்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் அனைத்து பகுதிகளில் விழுந்தது. இதனால் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை அன்று பல பகுதிகளில் நீர் வடிந்தது. இன்னும் பல பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
Advertisement
இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் சிதம்பரம் நகரில் முகாமிட்டு வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.