முகப்பு
தமிழ்நாடு

மலேசியாவில் தண்ணீரில் மூழ்கி இறந்த தமிழ் நடிகர்

தமிழ் நடிகர் ஒருவர் மலேசியாவில் அருவியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

Updated On : 23 நவம்பர், 2015 at 3:15 PM
பகிர்:

தமிழ் நடிகர் ஒருவர் மலேசியாவில் அருவியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் எல். கேசவச  ராஜன் (25), கக்கக்க போ என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

குடும்பத்துடன் மலேசிய சென்ற அவர் வடக்கு மலசியாவில் உள்ள லூபக் டிகாங்க் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக தவறி நீரில் விழுந்த அவர், நீரில் இழுத்து செல்லப்பட்டார்.

Advertisement

தண்ணீரின் போக்கு கடுமையாக இருந்ததால், அவரது உடல் பாறையில் சிக்கிக் கொண்டது. அவரது உடலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

கக்கக்க போ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பங்கேற்பதற்காக  ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்படவிருந்தார் கேசவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.