காவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மது போதையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்திபட்டி
தமிழ்நாடுகாவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மது போதையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்திபட்டி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மது போதையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை, கட்டகஞ்சன்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் கோவிந்தராஜன் (39). இவர் ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
கிருஷ்ணன்கோவில், காவல் நிலையம் அருகேயுள்ள ஆர்.பி.ஆர்.டிரஸ்ட் உரிமையாளர் ராம்பிரபு என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கோவிந்தராஜன் காவல் நிலையம் வந்துள்ளார்.
சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் புகார் மனுவை பெற்றுக் கொண்டு, மனு ரசீது தயார் செய்து அதில் கோவிந்தராஜனிடம் கையொப்பம் கேட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ், கையெழுத்து போட மறுத்து, நீங்கள் லட்சக்கணக்கில் எதிர் தரப்பிடம் பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள். உங்களை கொன்றால்தான் திருந்துவீர்கள் என்று கூறி மிரட்டி, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தாராம்.
இது குறித்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன், காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் வேணுகோபால் வழக்குப் பதிவு ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜனைக் கைது செய்தார்.