விருதுநகர் அருகே கருந்திரி தயாரித்த 3 பேர் கைது
விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்ததாக திங்கள்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்ததாக திங்கள்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது ஒண்டிப்புலி கிராமம். இங்கு குடியிருப்பு பகுதிகளில் அனுமதியில்லாமல் பட்டாசுகள் உற்பத்தி பயன்படுத்தும் கருந்திரிகளை தயாரித்து வருவதாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததாம். அதன் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீஸார் காலையில் அப்பகுதியில் திடீர் ரெய்டு செய்தனர்.
அப்போது, ஒண்டிப்புலியைச் சேர்ந்த சங்கரபாண்டி(43), மாரிக்கனி மற்றும் சோமசுந்தரம் வீடுகளில் கருந்திரிகளை தயார் செய்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இரு்நது 30 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். இது தொடர்பாக 3 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Advertisement