மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் கூடுதல் பாதுகாப்புப் படைகள்...
இம்பால் : மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் வியாழக்கிழமை(ஏப். 23) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம்கட்டமாக ஏப். 29-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஓராண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடவில்லை. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பின்னர், கூடுதல் பாதுகாப்புப் படைகள் மணிப்பூரில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மணிப்பூரின் உள்துறை அமைச்சர் இன்று(ஏப். 19) தெரிவித்தார்.
Advertisement
Advertisement
Manipur Home minister Govindas Konthoujam - "Additional security forces to arrive in Manipur after Bengal elections."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.