முகப்பு
தமிழ்நாடு

சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சம்பள ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 6 அக்டோபர், 2015 at 7:38 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:24 PM

சம்பள ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் கிளை செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெள்ளைத்துரை ஆர்ப்பாட்டம் குறி்த்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும. 10 மாத அகவிலைப்படியை வழங்குதல், கழகத்திற்கு அரசு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை வழங்கவும் மற்றும் காலாவதியான பேருந்துகளை உடனே மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில துணைச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.