விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 அபராதம்
விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
Advertisement
அதன் அடிப்படையில் பறக்கும் படை குழுவினர் 51 நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இருப்புக்குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.