பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் நிகழாண்டிற்கான பயிர் காப்பீட்டு திட்டம் தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 12 பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டு பயிர் காப்பீடு விவசாயிகளிடம் இருந்து பிரிமியம் பெறப்படுகிறது.
இம்மாவட்டத்தில் கம்பு, சோளம், மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு கடன்பெறும் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அறிக்கையின் படி பிரிமியம் செலுத்த செப்.30ம் தேதி ஆகும்.
தற்போது, இக்கால அவகாசம் இம்மாத இறுதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.