சாத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை
சாத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சாத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சாத்தூர் பாரதிநகரைச் சேர்ந்த கார்வண்ணமூர்த்தியின் மனைவி அய்யம்மாள்(43). இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அய்யமாளை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி.குமார், நகர் காவல் நிலைய போலீஸார் சிவகுமார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
Advertisement
இதுகுறித்து சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாகவும், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.