முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி கடைசி தெருவைச் சேர்ந்தவர் ராஜையா மகள் தங்கம் (25). இவர் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இதே இடத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முருகன் (26). இவர் சிவகாசியில் கட்டிங் மிஷினில் வேலை செய்து வருகிறார்.

தங்கம் வீட்டில் தனியே இருந்த நேரத்தில் 16.1.15-ம் தேதி முருகன் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். தங்கத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் ஊர் நாட்டாமை உள்ளிட்டோர் முருகன் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார்கள். ஆனால் முருகன் தரப்பினர் திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனையடுத்து நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்கம் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →