முகப்பு
தமிழ்நாடு

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல் பாதுகாப்பு படை நடவடிக்கை

கடலூரில் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

கடலூரில் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

கடலூர் முதுநகர் அருகேயுள்ள சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் முருகைய்யன் மகன்கள் கவிராஜா(26), கவி(24), சிவசாமி மகன் தர்மலிங்கம் (21), சூரியகாந்தன் மகன் வெங்கடேஷ்(29), முனியப்பன் மகன் வேந்தன்(27). அனைவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக ஒரே பைபர் படகில் கடலூர் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றனர்.

படகு சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்ற போது திடீரென பழுதானது. இதனால், படகிலிருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர். அப்போது மீனவர்களுக்கான இலவச தொலைதொடர்பு வசதிக்காக வழங்கப்பட்டுள்ள எண்.1093ஐ அவர்கள் உதவிக்கு அழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்திலிருந்து கடலோர காவல் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வி.சிவகுருநாதன் தலைமையிலான குழுவினர் மற்றொரு படகில் கடலுக்குள் சென்றனர். அங்கு தத்தளித்த 5 மீனவர்களை மீட்டதோடு, படகையும் இழுத்து வந்து கரை சேர்த்தனர். விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கு மீனவ அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →