முகப்பு
தமிழ்நாடு

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை போட்டு விட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தமிழ்நாடு

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை போட்டு விட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை போட்டு விட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி ஆதிலட்சுமி (73). இவர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கீழரதவீதியில் தேரடி அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்  ஆதிலட்சுமி மீது மோதிவிட்டு, வண்டியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த ஆதிலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸார் விசாரித்ததில் வண்டி நக்கமங்கலத்தைச் சேர்ந்த செ.பெரியகாளிமுத்து என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வண்டியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞரைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →