முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வரை இன்று கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2.300 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வரை இன்று கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2.300 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வரை இன்று கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2.300 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் சார்பு ஆய்வாளர் வீரணன், அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அய்யம்பட்டி செக்கடித் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மனைவி கோது லட்சுமி (40) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர்.

மங்காபுரம், அரசு போக்குவரத்துக் கழக பணி மனையின் பின்புறம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த சிவசாமி மனைவி இந்திரா (50), வீரணன் மகன் காசி மாயன் (38), முருகன் மகன் சத்யா (31) ஆகியோரைக் கைது செய்து அவர்களிடம் இருந்த 1.200 கி.கி. கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →