சிதம்பரம் தில்லைக்காளி கோயில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி சிறப்பு வழிபாடு
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு செய்தார்.
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு செய்தார்.
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.
கோயிலில் தில்லை அம்மன், தில்லைக்காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை பார்த்து தரிசித்துவிட்டு இரவு 9 மணிக்கு புதுச்சேரி புறப்பட்டு சென்றார். முன்னதாக புதுச்சேரி முதல்வரை கோயில் நிர்வாகத்தினர் மேளதாளத்துடன் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
Advertisement