முகப்பு
தமிழ்நாடு

ஆந்திராவில் ரூ.4.4 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.4.4 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 10:15 AM
பகிர்:


மச்சிலிப்பட்டினம்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.4.4 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டன.

அவற்றின் மதிப்பு ரூ.4.4 லட்சம் என்றும், அதனை பதுக்கி வைத்திருந்த 4 பேரை கைது செய்திருப்பதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.