ராமேஸ்வரம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
ராமேஸ்வரம் அருகே வானகபுரியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பத்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே வானகபுரியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பத்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இரண்டுலட்சம் ரூபாய் ஆகும்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பகுதி உச்சிப்புளி. இங்கே கடல்பகுதியில் வனகபுரி என்ற இடத்தில் கஞ்சா பதுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கே விரைந்து சென்று சோதனை செய்த போலீசார், கடற்கரை ஓரமாக புதைத்து வைக்க ப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். சர்வதேச சநதையில் இதன்மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த கஞ்சாவானது இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
Advertisement