திருச்சி தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் திருட்டு
திருச்சியில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயுள்ளது.
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:02 PM
திருச்சியில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயுள்ளது.
திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தோடு கோயம்பத்தூர் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
Advertisement
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.