முகப்பு
தமிழ்நாடு

தென் மாவட்ட மாணவர்களுக்கான மெகா வளாக நேர்காணல்: 121 பேருக்கு பணி நியமன ஆணை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற மெகா வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு

தமிழ்நாடு

தென் மாவட்ட மாணவர்களுக்கான மெகா வளாக நேர்காணல்: 121 பேருக்கு பணி நியமன ஆணை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற மெகா வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற மெகா வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா சனிக்கிழமை வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவ மாணவியர் இந்த வளாக நேர்காணலில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பெங்களூரு வீ டெக்னாலஜி பொது மேலாளர் சௌஜன்யா தலைமையில் வந்திருந்த குழுவினர் பல்வேறு தேர்வுகளை இரு நாட்கள் நடத்தினர். இத் தேர்வில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 மாணவ மாணவியர், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த 19 பேர், கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 121 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் அலாவூதீன், பேராசிர்யர்கள் பாலகுமார், செண்பகவல்லி ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →