பா.ஜ.க. ஸ்ரீவிலி. சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம்
பாரதீய ஜனதா கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடுபா.ஜ.க. ஸ்ரீவிலி. சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம்
பாரதீய ஜனதா கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாரதீய ஜனதா கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி வி.ஜி.முருகன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் தொடக்க விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.டி.சோலையப்பன், மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில பிரச்சார அணி செயலாளர் முத்துராமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே.மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோ செல்வன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் கே.பிரபாகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பி.முனியசாமி, ஒன்றிய பொறுப்பாளர் தேன்கனி, வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.நவநீதகிருஷ்ணன், வழக்குரைஞர் வைதேவி, நகரச் செயலாளர் எம்.ஜானகிராமன உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் மத்திய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.