புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலாளர் ராகேஷ் சந்திரா மாரடைப்பால் மரணம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலாளர் ராகேஷ் சந்திரா ஐஏஎஸ் தில்லியில் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலாளர் ராகேஷ் சந்திரா ஐஏஎஸ் தில்லியில் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.
முதல்வரின் செயலாளராகவும் கல்வி, துறைமுகம் போன்ற அரசுத் துறைகளில் பணியாற்றி வந்த அவர் செவ்வாய்க்கிழமை முதல்வர் நாராயணசாமியுடன் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதற்காக தில்லி சென்றிருந்தார். அப்போது, நேற்றிரவு அறையில் உறங்கச் சென்றிருந்த அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது உடல், சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு இன்று கொண்டு செல்லப்படுகின்றது.