முகப்பு
தமிழ்நாடு

என்.எல்.சி. சுரங்கத்தில் தாமிரக் கம்பி திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார்

நெய்வேலி சுரங்கப்பகுதியில் தாமிரக் கம்பி திருடிய இளைஞரை தெர்மல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

நெய்வேலி சுரங்கப்பகுதியில் தாமிரக் கம்பி திருடிய இளைஞரை தெர்மல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நெய்வேலி, என்எல்சி சுரங்கம்-1, ஆர்.ஆர். யார்டு பகுதியில் சிஐஎஸ்எப் காவலர் சோனிக்குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்.ஆர். யார்டு பகுதியில் இருந்து 17 மீட்டர் தாமிரக் கம்பியை திருடியதாக ஒருவரை பிடித்து தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தியதில் தாண்டவன்குப்பம் பெரியண்ணன் மகன் பெரியசாமி(28) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →