புதுச்சேரியில் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் நாராயணசாமி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு 3.34 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதன்படி அரியாங்குப்பம், பாகூரில் குடும்ப அட்டைகளுக்கு இலவச சர்க்கரை வழங்கும் பணியை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் அரசின் முன் இரண்டு பணிகள் உள்ளன. சட்டம் ஒழுங்கு, பராமரிப்பு, மக்களுக்கான திட்டங்களை சீராக நிறைவேற்றுவதாகும். காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பின் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டுள்ளது.
குடும்ப அட்டைகளுக்கு தரப்படும் இலவச உணவுப் பொருள்களான அரிசி, சர்க்கரை போன்றவை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதை அரசு தீவிரமாக மேற்கொள்ளும். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சர்க்கரை, அரிசி, போன்றவை துரிதமாக வழங்கப்படும் என்றார்.
கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி பேசுகையில்: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி தரமில்லாமல் உள்ளது என புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு தரமான அரிசியை கிடைக்கச் செய்ய அரசு ஏற்பாடு செய்யும்.