அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மு.க. ஸ்டாலின் சந்தித்தது ஏன்?
தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துவதற்காக, ஓ. பன்னீர்செல்வத்தை, மு.க. ஸ்டாலின் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உடனிருந்தார்.
அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளுடனான கூட்டத் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை மு.க. ஸ்டாலின், பன்னீர்செல்வத்திடம் வழங்கினார்.